வணக்கம் தமிழ் செய்திகள்

Hello Tamil News

வணக்கம் தமிழ் செய்திகள்

More
  • Home
  • News
  • siththarkal
    • siththarkal
  • Members
  • Photos
  • Forums
  • Events
  • Contact Us
  • About Us
  • Tanjore mullivaikal memorial

News

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு

view:  full / summary

New Entry

Posted by g.sivas007 on September 6, 2013 at 4:55 PM Comments comments (0)

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்.


 

 

 

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.

 

அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.

 

 

 

இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 

 

 

இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.

 

 

 

ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்' போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.

 

 

 

சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.

 

அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக' மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.

 

 

 

காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

 

 

 

தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.

 

 

 

இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.

 

 

 

தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.

 

 

 

சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.

 

 

 

அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.

 

 

 

தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

 

 

 

தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.

 

 

 

ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.

 

 

 

உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

 

 

 

திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.

 

 

 

போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை

Post New Entry

Posted by g.sivas007 on July 12, 2013 at 9:20 AM Comments comments (0)

சீமானைப் பார்த்து ஏன் தான் இவர்கள் இப்படி பயப்படுகிறார்களோ...???


 

(*) சீமான் தமிழ்த்தேசியத்தை பேசுவதோடு மட்டுமல்லாமல் அதற்காக ஊர் ஊராய் போய் தம்பிகளை இனத்தின் விடுதலைக்காக திரட்டியும் வருகிறார்.

 

(*) சீமான், தான் எந்த சாதி என்பதை எவரிடமும் சொல்லிக்கொண்டதே இல்லை. ஆனால் அதை அவரின் சொந்த ஊருக்குப்போய் மோப்பம் பிடித்து வந்து "சாதியை" சொல்கிறார்களே, அவர்கள் தான் "சாதியை ஒழிக்கப்போகிறார்களாம்(?)".

 

(*) "பகை மிரளத் திரள்வோம்! பைந்தமிழ் இனத்தீரே!" என்று என்று முழக்கம் இருக்குமே ஒழிய எந்த சாதியையும் குறித்து இருக்காது. ஆனாலும் சீமான் போலித்தமிழ்த்தேசியவாதியாம்!

 

(*) இந்த மண்ணில் வேலுநாச்சியாருக்கு, பூலித்தேவனுக்கு, ஒண்டிவீரனுக்கு, தீரன் சின்னமலைக்கு, மருது பாண்டியருக்கு, இரட்டைமலை சீனிவாசனுக்கு, பசும்பொன்னாருக்கு வீர வணக்கம் செலுத்துகிற, செலுத்தத் துப்புள்ள ஒரே அரசியல் கட்சி, நாம் தமிழர் கட்சி மட்டுமே! இது எம் இனத்தின் எல்லா மூத்தவர்களையும் மதிக்க மாண்பு. இதை இதற்கு முன் எவனடா கற்றுத்தந்தது?

 

(*) ஒண்டிவீரனுக்கு எல்லோரும் போவோம். பசும்பொன்னார் நினைவிடத்திற்கு எல்லோரும் போவோம். தீரன் சின்னமலைக்கு எல்லோரும் போவோம். இது சாதி பார்த்து ஒருபோதும் இல்லை. இவர்களை "எங்கள் சாதிக்காரன்" என்று தந்திரக்காரர்கள் செய்த பிழையில் ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் வணங்குவது சரியா? இல்லை, இத்தனை காலம் "எதிர்ச்சாதி" என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தவர்களும் வந்து வணங்குவது சரியா? இதை செய்தவனும், செய்யச்சொல்பவனும் சீமான்.

 

(*) தேவர்களும் பள்ளர்களும் காலங்காலமாய் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கையில், பள்ளர்களோடு பசும்பொன்னாருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் தேவர்களோடு இம்மானுவேல் சேகரனுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் சரியாக இருக்குமா? இல்லை, இரண்டு பக்கமும் கூர் தீட்டிவிட்டு சண்டை போட வைப்பது சரியா? கருத்து சொல்லும் நாய்களும் கூர் தீட்டி விடும் நாய்களும் நலமாகத்தான் இருக்கின்றனர். பலியாவது யார்? இதை சரி செய்ய முயல்பவன் சீமான்.

 

 

(*) சீமான் என்றால் சீமான் மட்டுமல்ல. நான், நாங்கள்... நாங்கள் எல்லோரையும் எம் தமிழினத்தின் மூத்தவர்களாக மதிக்கிறோம். இது சாதிக்குழுக்களை சொறிந்துவிடும் செயல் என்று சொல்பவர்களை மக்கள் தான் அடையாளம் காண வேண்டும். "சாதி ஒழிப்பே சமூக விடுதலை" என்று கொள்கையுடைவர்கள் தான் இவர் இவர்கள் இன்ன இன்ன சாதி என்றே கண்டுபிடித்து உளவு வேலை பார்க்கின்றனர். இதை கண்டுபிடிப்பதை ஏதோ ஒரு சாதனை போலவும் நினைப்பதை எதுவழியே சிரிப்பதென்று தெரியவில்லை.

 

 

(# ம்ம்ம்ம்!!! இன்னும் அதிகமாக சிந்தித்து விமர்சனம் செய்யுங்கள்! சீமானை மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்யுங்கள்! எங்களை விடவும் எங்களை வளர்க்கும் கடமை உங்களுக்கே அதிகம் உள்ளது...!!!)

Post New Entry

Posted by g.sivas007 on July 12, 2013 at 9:10 AM Comments comments (0)

மாமன்னர் புலித்தேவனின் வரலாறு !


“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?

நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”

 

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வீரவாழ்க்கை வாழ்ந்தவன். பாளையக்காரர்களில் கும்மிப்பாடல் தாலாட்டுப்பாடல் என பாட்டுடைத்தலைவனாக இருந்த ஒரு சிலரில் பூலித்தேவனும் ஒருவன். 1715-ல் சித்திரபுத்திரதேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் பிறந்து நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பாளையக்காரனாக மாறினான்.

தனது 35வது வயதிலிருந்து 52 ம் வயது வரை ஆற்காட்டு நவாபு படைகளையும். கும்பினியர்கள் படையையும் எதிர்த்துப் போராடினான்.

 

1736-ல் மதுரைநாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பாளையங்கள் திறை செலுத்த மறுத்து தனித்தே செயல்பட ஆரம்பித்தன. மதுரையை வெற்றிகொண்ட ஆற்காட்டு நவாபு முகமது அலி தனது சகோதரன் அப்துல் ரஹீம் என்பவன் தலைமையில் 1751-ம் ஆண்டு 2500 குதிரைப் படைகளையும் 300 காலாட்படைகளையும் 30 ஐரோப்பியர் பட்டாளத்தையும் அனுப்பி பாளையங்களை அடக்கி வரியை பிடுங்கிவர உத்திரவிட்டான். இப்படையை கும்பினியர் தளபதி லெப்டினட் இன்னிசு வழிநடத்திச் சென்றார். இதை அறிந்த பூலித்தேவன் சுற்றுவட்டாரப்பாளைங்களை ஒன்று திரட்டி எதிர்க்கத் தயாரானான். படை கண்டு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றவர்களுக்கு பூலித்தேவனின் படைபலம் கண்டு பின்வாங்கிச் சென்றனர்.

 

அரசு வரியில்லாமல் வாழமுடியுமா?. அதுவும் கோட்டை கொத்தளங்களும், அந்தப்புர கும்மாளங்களும் இல்லாமல் ஆற்காட்டு நவாப்புக்கும், கும்பினியர்களுக்கும் இருக்க முடியுமா? எனவே ஆற்காட்டு நவாபு நெல்லைச்சீமையில் வரிவசூலிக்க கிழக்கிந்திய கம்பெனிக்கு உரிமை வழங்குவதாக கூறி உதவியை நாடினான். இதனையே பெரும்வாய்பாக கருதி திருச்சியில் முகாமிட்டிருந்த கர்னல் அலெக்சாண்டர் கெரான் 1755-ல் பிப்ரவரி மாதத்தில் பீரங்கிகளுடனும், 2000 சிப்பாய்களுடனும், 500-ஐரோப்பியர்களுடனும் படைநடத்திவந்தான். கர்னல் கெரானுடன் நவாப்பின் அண்ணண் மாபூசுக்கானும், முகமது யூசுப்கானும் (மருதநாயகம்பிள்ளை) இணைந்து வந்தனர். வரும் வழியில் திண்டுக்கல்லுக்கும் மணப்பாறைக்கும் இடையில் இருந்த லக்கநாயக்கன் பாளையத்தை கைப்பற்றி மதுரைக்குள் நுழைந்தான். மதுரை அப்போது சந்தாசாகிப் ஆதரவாளர்களிடமிருந்தது. அவர்களின் எதிர்ப்பின்றியே மதுரையைக் கைப்பற்றி பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படைகளை நகர்த்தி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டான்.

 

அப்போது அங்கு வீரபாண்டிய கட்டபொம்முவின் பாட்டன் பொல்லாப்பாண்டியன் (1736-1760) ஆட்சியிலிருந்தார். பொல்லாப்பாண்டியன் ஒருபகுதி கப்பத்தை கட்டிவிட்டு மீதித்தொகைக்கு பாளையத்தின் கஷ்டத்தை எடுத்துக் கூறினான். கர்னல் கெரான் அதற்கு இணங்காமல் அவனது இருமகன்களையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்து மீதித்தொகை கிடைத்தவுடன் விடுத்தான். பாஞ்சாலங்குறிச்சி முடிந்தவுடன் நத்தக்கோட்டை பாளையத்தை முற்றுகையிட்டு கப்பத்தை வசூலித்தான். இதனிடையே மபுசூக்கான் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கிட படையுடன் புறப்பட்டான். இதை அறிந்த பூலித்தேவன் அபபடையை வழியிலேயே இடைமறித்து தோற்கடித்து விரட்டினார்.

 

பல பாளையங்களை பிடித்த வேக்த்தில் திரும்பிட நினைத்த கர்னல் கெரானை மபுசூக்கான் பூலித்தேவன் மீது படையெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினான். இதனால் கெரான் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டை மீது படையெடுக்கக் கிளம்பினான். எத்தனையோ பாளையங்களை அடக்கிய எமக்கு இது எத்தனை நாளைக்கு என்ற எண்ணத்துடன் தாக்குதலை ஆரம்பித்தான்.

 

ஆறு பவுன்ட் பீரங்கிகளைக் கொண்டு தாக்கினான். கல்லால் ஆன கோட்டை கர்ஜித்து நின்றது. 4000 படை வீரர்கள் கோட்டையின் பாதுகாப்பிற்காக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த கர்னல் கெரான், சமாதான முறையில் பேசிப் பணியவைத்திட துபாசு முதலியார் என்பவரை தூது அனுப்பினான். ஒரு பகுதி கப்பம் கட்டினால் முற்றுகை நீக்கப்படும் என்று தெரிவித்தான். ஆனால் பூலித்தேவன் இதற்கு சம்மதிக்கவில்லை. கெரானின் படைகள் களைத்திருந்ததையும். உணவுநெருக்கடியில் இருந்ததையும் அறிந்து கொண்ட பூலித்தேவன் விற்படை, வேற்படை, வாட்படை, மற்படை என நான்கு வகையிலும் தாக்குதல் தொடுத்து கெரானின் படைகளை சிதறடித்தான். 1755-ல் மே-22-ல் கெரான் நெற்கட்டாஞசெவ்வலிலிருந்து பின்வாங்கினான். பூலித்தேவனின் வெற்றி அவனது புகழை பரப்பியது . மேலும் பலபாளையங்கள் நட்பாகின. நாட்டுபுறப்பாடல்களில் பாட்டுடைத்தலைவனாக மாறினான்.

களக்காட்டில் அதே ஆண்டு யுத்தகளம் மீண்டும் உருவானது. நவாபுவின் திருச்சி பிரதிநியாக இருந்த முடோமியா தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி களக்காட்டுக் கோட்டையை திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனுக்கு விற்பனை செய்தான். மார்த்தாண்ட வர்மன் அங்கு 2000 படைவீரர்களை நிறுத்திவைத்தான். நவாபுவின் மபுசூக்கான் திடீர்த்தாக்குதல் நடத்தி களக்காடு கோட்டையை கைப்பற்றினான். மபுசூக்கான் மதுரை சென்றிருந்த நேரம் பார்த்து பூலித்தேவனும், மார்த்தாண்ட வர்மனும் இணைந்து களக்காடு கோட்டையை கைப்பற்றினர். கடுங்கோபமுற்ற மாபுசூக்கான் 600 குதிரைப்படைகளுடனும் 1000 சிப்பாய்களுடனும் சிலபாளையக்காரர்களையும் இணைத்துக்கொண்டு கோட்டையைத் தாக்கினான். இப்போரில் பூலித்தேவன் வெற்றிபெற்று களக்காட்டை தக்கவைத்துக் கொண்டான்.

இவ்வெற்றி பூலித்தேவனுக்கு புதுத்தெம்பைக் கொடுத்தது. தனது பாதுகாப்பு எல்லையை விரிவுபடுத்த எண்ணி திருவில்லிபுத்தூர் கோட்டையை கைப்பற்றத் திட்டமிட்டான். மதுரைக்கும் நெல்லைக்கும் இடையிலே இருப்பதால் இதன் இருப்பு முக்கியமாகப் பட்டது. இக்கோட்டை ஆற்காடு நவாபுவின் தம்பி ரஹீம் மேற்பார்வையில் 3000 சிப்பாய்களுடனும், 30 கும்பினியர்களின் துணைப்படையுடன் பாதுகாப்பாக இருந்தது. நேரம் பார்த்து பல ஆயிரம் காலாட்படையுடனும் 1000 குதிரைப்டையுடனும் தாக்குதலைத் தொடுத்து கோட்டையை கைப்பற்றினான். ரஹீம் விரட்டி அடிக்கப்பட்டான். இந்த வெற்றி கும்பினியர்களையும், நவாப்பையும் வெறுத்த பல பாளையக்காரர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. பூலித்தேவனுக்கோ வெற்றியின் வேகம் அடுத்த இலக்கைத் தேடியது. மாபுசூக்கான் தங்கியிருந்த திருநெல்வேலியைக் கைப்பற்றி மாபுசூக்கானை ஒழித்துவிட திட்டமிட்டான்.

1756-மார்ச் 21. திருநெல்வேலி மீது பூலித்தேவன் படையெடுத்தான். பூலித்தேவனை நெல்லைக்கு அருகாமையில் இருந்த பாளையங்கள் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் சண்டை தீவிரமாக நடைபெற்றது. பூலித்தேவனிடம் முடோமியா என்ற பட்டாணியத் தளபதி இருந்தான். இவனது வீரமும் சூரத்தனமும் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. ஆனாலும் போர்க்களத்தில் முடோமியா எதிரிகளால் வெட்டி வீழ்த்தப்பட்டான். பூலித்தேவன் படைகள் சிதறின. பூலித்தேவன் 2000 வீரர்களைப் பறிகொடுத்து நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். முடோமியாவின் மரணம் பூலித்தேவனுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது.

யுத்தக்கள இரத்தம் காயுமுன் காட்சிகள் மாறின. மாபூசுக்கானை சென்னைக்கு திரும்பிட நவாபு உத்திரவிட்டார். மாபூசுக்கான் மறுத்தான். ஆங்கிலேயத் தளபதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனிடையே முகமது யூசுப்கான் நெல்லைப் பாளையங்களை அடக்கி வரிவசூலிக்க பணிக்கப்பட்டான். உள்ளே மோதல் முற்றியது. நேற்றுவரை யுத்தக்களத்தில் வெட்டி வீழ்த்திய பூலித்தேவனிடம் மாபூசுக்கான் அடைக்கலம் பெற்று அவனுக்காக போர்புரியத் துவங்கினான். மாபூசுக்கானை பூலித்தேவன் சிறைபிடித்து வைத்துள்ளதாகவே யூசுப்கான் கருதினான். அத்துடன் பூலித்தேவனை அடக்கிடவும் வரிவசூலித்திடவும் முடிவெடுத்தான்.

1756-மே-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி திருவில்லிபுத்தூர் கோட்டையை பூலித்தேவனிடமிருந்து கைப்பற்றினான். ஆகஸ்ட் 10ம் தேதி வந்தியத்தேவனையும். வாண்டையத்தேவனையும் தோற்கடித்து கொல்லங்கோட்டை பாளையத்தைக் கைப்பற்றினான். டிச.1 அன்று கங்கைகொண்டான் என்ற இடத்தில் பூலித்தேவன் படைகளும் யூசுப்கான் படைகளும் மோதிக்கொண்டன. இதில் பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு திரும்பினான். பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. ஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன.

1759 ஜீலை-யில் கும்பினியர்களின் படைகள் மீண்டும் யூசுப்கான் தலைமையில் புறப்பட்டன. 6400 காலாட்படைகளுடனும். 600 குதிரை வீரர்களுடனும் ஊத்துமலை பாளைத்தைக் கைப்பற்றினான். இவனுடன் திருவிதாங்கூர் மார்த்தாண்ட வர்மனின் படைகளும் இணைந்தன. செப்.23-ல் வடகரை பாளைத்தைக் கைப்பற்றினர். வடகரை தீக்கரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. நவ.6-ல் பூலித்தேவனின் நெற்கட்டாஞ்செவ்வல் கோட்டையை தாக்கினான் யூசுப்கான். அங்கே நிலைகொண்டு வாசுதேவநல்லூர் கோட்டையையும் தாக்கத் துவங்கினான். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பூலித்தேவனின் 3000 சிப்பாய்கள் யூசுப்கானின் படைக்குள் புகுந்து சிதறடித்தனர். திடீர்த்தாக்குதலில் 200 வீரர்களை இழந்து கும்பினியப்படை சிதறுண்டது. பூலித்தேவனுக்கு இதைவிட சேதாரம் அதிகமானாலும் கோட்டை பாதுகாக்கப்பட்டது.

யுத்தம் நிறுத்தப்பட்டு துரோகங்கள் அரங்கேற்றப்பட்டது. நெற்கட்டாஞ்செவ்வலுக்கு அருகில் இருந்த நடுவக்குறிச்சிப் பாளையமும் 2000 வீரர்களும் கும்பினியர்கள் பக்கம் மாறினர். இவர்களின் உதவியுடன் நெற்கட்டாஞ்செவ்வலை சுற்றியுள்ள காடுகளில் கும்பினியர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டு தாக்குதலுக்குத் தயாராகின. இதை அறிந்த பூலித்தேவனின் படைத்தளபதிகளில் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தைச்சேர்ந்த வெண்ணிக்காலடி கும்பினிய முகாம்களை குலைத்திட நினைத்தான். இரவோடு இரவாக தாக்கி பலவீரர்களை பலிகொண்டு தானும் பலியானான். மாய்ந்துகிடந்த வெண்ணிக்காலடியை மடியிலே கிடத்தி மனம் வெந்தான் பூலித்தேவன். வெண்ணிக்கொடிக்கு வீரக்கல்லில் வல்லயத்தை வைத்தான் பூலித்தேவன். இவன் போரிட்ட இடம் “காலாடிமேடு” என்று அழைக்கப்படுகிறது.

1760-டிசம்பர் மாதம் யூசுப்கான் பூலித்தேவனின் கோட்டையைத் தாக்கினான். நான்கு மாதங்கள் இத்தாக்குதல் நடைபெற்றது. 1761-மே மாதம் வாசுதேவநல்லூர் கோட்டை, நெற்கட்டாஞ்செவ்வல், நல்லூர்கோட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டன. பூலித்தேவன் இராமநாதபுரம் கடலாடிக்கு தப்பிச்சென்றான். வரலாற்றின் தடம் மாறியது. 1764ல் யூசுப்கான் மதுரையில் மறைந்தான். 1766-ல் பூலித்தேவன் கடலாடியிலிருந்து திரும்பி வந்து வாசுதேவநல்லூர் கோட்டையை புதுப்பித்து ஆட்சி செய்தான். இதை அறிந்த ஆங்கிலேயர்கள் 1766-அக்டோபரில் தாக்குதலைத் துவங்கினர். 1767-மே மாதம் வரை இத்தாக்குதல் நீடித்தது.

1766 அக்டோபர் மாதம் கேப்டன் பௌட்சன் தலைமையில் வாசுதேவநல்லூர் கோட்டை தாக்கப்பட்டது. டிசம்பர் மாதம் மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயின்டர் தலைமையில் கொல்லங்கொண்டான் கோட்டை தாக்கப்பட்டது. ஐந்து ஆங்கிலத்தளபதிகளும் ஏராளமான சிப்பாய்களும் இறந்ததால் கும்பினியப்படை பின்வாங்கி நெல்லைக்குச் சென்றது. 1767, ஏப்ரல் 29-ல் கர்னல் டொனால்டு கேம்பெல் பெரும்படையுடன் கொல்லங்கொண்டான் கோட்டையைத் தாக்கி தரைமட்டமாக்கினான். சேத்தூரையும் கைப்பற்றினான். மே 13.ம் தேதி வாசுதேவநல்லூர் கோட்டையினைத் தாக்கினான். ஒரு வார யுத்தத்திற்குப் பிறகு கோட்டை வீழ்ந்தது. பூலித்தேவனும் அவனது வீரர்களும் காட்டிற்குள் தப்பிச்சென்றனர். பின்னர் பூலித்தேவன் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் வழிபடச் சென்றபோது தப்பிச்சென்றதாக தகவல் உள்ளது.

பூலித்தேவனின் படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒண்டிப்பகடை, வெண்ணிகாலாடி போன்ற தளபதிகளின் வீரமும், தியாகமும் எழுச்சி கொள்ளச்செய்யும். பட்டாணிய இனத்தைச் சேர்ந்த முடோமியா மற்றும் நபிகான் கட்டாக் போன்றவர்களும் இருந்து வீரமரணம் எய்துள்ளனர். பூலித்தேவனுடன் இணைந்த மாபூசுக்கான் மாற்று மதமானாலும் மரியாதையுடன் நடத்தப்பட்டான். அவனது வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட்டது. அவனது தொழுகைக்கு பள்ளிவாசல் அமைத்துக் கொடுக்கப்பட்டது.15 ஆண்டுகள் கும்பினியர்களை எதிர்த்து உறுதிகுலையாமல் போரிட்ட வீரனின் மரணத் தடயம் கிடைக்காவிட்டாலும் அவனது உறுதிகுலையாத வாழ்வையும் போர்க்கள வீரத்தையும் வரலாறு பதியவைத்துள்ளது.

Post New Entry

Posted by g.sivas007 on July 12, 2013 at 8:30 AM Comments comments (0)

 வீரமங்கை வேலு நாச்சியார் வரலாறு 

இராணி வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி: 1780- கி.பி 1789

 

முடிசூட்டு விழா : கி.பி 1780

பிறப்பு : 1730

பிறப்பிடம் : இராமநாதபுரம்

இறப்பு : 25 டிசம்பர், 1796

முன்னிருந்தவர் : முத்து வடுகநாதர்

குலம் : அரச வம்சம்,

தந்தை : செல்ல முத்து சேதுபதி

 

 

எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.

 

 

பிறப்பு :-

 

'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

 

குழந்தை பருவம் :-

 

வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை.

 

திருமணம் :-

 

வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.

 

சிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக "சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள்". வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

 

மன்னர் மரணம் :-

 

நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.

 

வீரமங்கை வேலுநாச்சியார்:-

 

திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.

 

வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.

 

பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா?'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.

 

கோட்டை மீட்பு :-

 

வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு "சின்ன மருதை தளபதியாகவும்", இன்னொரு படைக்கு "பெரிய மருதுவுடன்" இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.

 

சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

 

அரியணை ஏறுதல் :-

 

 

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

 

இறுதி நாட்கள் :-

 

1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.

 

 

சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்:-

 

 

1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்

 

2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்

 

3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்

 

4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்

 

5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்

 

6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்

 

7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்

 

8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்

 

9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்

 

10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்

 

11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி

 

12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்

 

13. 1878 - 1883 - துரைசிங்கராஜாதேவர்

 

14. 1883 - 1898 - து. உடையணராஜாதேவர்

 

15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜாதேவர்

 

16. 1941 - 1963 - து. சண்முகராஜாதேவர்

 

17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜாதேவர்

 

18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்தேவர்


Post New Entry

Posted by g.sivas007 on June 20, 2013 at 1:50 AM Comments comments (0)

எங்கள் அப்பா இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம்...



Post New Entry

Posted by g.sivas007 on June 20, 2013 at 1:20 AM Comments comments (0)

"பெண்ணின் கண்­ணீருக்கும் கற்புக்கும் மதிப்பளித்த எங்கள் தலைவர்"


இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன்

நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண்.

 

கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவி

னர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும் எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா?.

 

இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது.

 

அந்தப் பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல. இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார்.

 

நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பௌத்த மத குரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது.

 

அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மத குருவிடமும் சொன்னான் அந்த சிங்கள ராணுவ வீரன்.

 

என் கணவன், மாமியார், மத குரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என்ன செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்­ரோடு நின்றாள்.

 

அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு ராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த ராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார்.

 

பெண்ணின் கண்­ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் தமிழீழத்து பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்றார் அறிவுமதி.

Post New Entry

Posted by g.sivas007 on June 5, 2013 at 6:30 AM Comments comments (0)

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

 

தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

 

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

 

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

 

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

 

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

 

வுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

 

1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

 

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

 

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

 

1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

 

யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

 

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

 

தொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

 

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

 

2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

 

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

 

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

Post New Entry

Posted by g.sivas007 on June 5, 2013 at 1:35 AM Comments comments (0)

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல்வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர். நடன காசிநாதன்தான் அந்த அதிகாரி.

 

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

 

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

 

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

 

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

 

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம். அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

 

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிஷ் கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம். அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக.

 

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் ஹரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது. கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

 

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் ஹரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குஜராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற ஹரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார். அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது. கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் ஹரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

 

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது ஹரப்பா கால எழுத்தல்ல என்கிறார். தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

 

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு. ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

 

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

 

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம் என்றார் நடனகாசிநாதன் ஆவேசத்துடன்.

 

என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

 

- அ. துரை

Post New Entry

Posted by g.sivas007 on May 21, 2013 at 12:35 AM Comments comments (0)

நாம் தமிழர்...


தலை வணங்குகிறேன்!

 

முதலில் இதை கூறிக்கொள்கிறேன்...

 

கண் மூடித்தனமாக "நாம் தமிழர்" கட்சியினை ஆதரிப்பவன் நான் அல்ல. கட்சின் மீது இருக்கும் தவறினை ஆதாரத்தோடு நிரூபித்தால் அதையும் ஏற்பவன். இது இக்கட்சியில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கருத்து.

 

சரி நான் ஏன் "நாம் தமிழர்" கட்சியை ஆதரிக்க வேண்டும்?

எனது முந்தயதொரு பதிவில் குறிப்பிட்டதைப்போல கொள்கைகளுக்காக மட்டுமல்ல,

தற்போதய சூழ்நிலையில் கட்சியின் செயல்பாடு வரையிலும் தான்.

 

சமீபத்திய பிரச்சினையிலிருந்து எடுத்துக்கொண்டால் 'கடலூர்' ல் நடத்தப்பட்ட ஒரு அடக்கு முறை வேறு எந்த கட்சிக்கும் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்றய தமிழகத்தின் அமைதிக்கு உத்தரவாதம் இல்லை. அதை கையாண்டவிதம், தம்பிகளை கட்டுப்படுத்திய முறைகள் இது பரிசீலிக்கப்படவேண்டியவை.

 

நான் வைகோ ஐயாவை குறை கூறவில்லை ஆனால் அவர் மீதும் என் வருத்தம் என்னவென்றால்...

எனக்கு 23 வயதாகிறது ஆனால் நாம் தமிழர் இயக்கம் வந்து சொல்லும் வரை ஈழம் என்ற வார்த்தையை கூட கேள்விப்பட்டதில்லை. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அரசியல் அறிவே இல்லை. இந்த வேலையை மிகச்செம்மையாக செய்திருக்கவேண்டியது ஐயா வைகோ அவர்கள் ஆனால்.....?

 

எந்த மண்ணில் எமது தேசியதலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பெயரை சொன்னால் கூட தண்டனை என்ற நிலை இருந்ததோ அதே மண்ணில் அவரையே தலைவராய் ஏற்று ஒரு அரசியல் இயக்கம். அவரை அதுவரை தன்னை தமிழன் என்று உணர்தவர்கள் கூட அவரின் பெயரை உச்சரிக்க தயங்கியபோது எங்கள் தேசிய தலைவர் என்று எல்லோரையும் அழைக்க வைத்தது இந்த இயக்கம். ஆனால் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கவேண்டியது ஐயா வை...

 

நீ இந்தியன், திராவிடன் என்ற இருட்டறைக்குள் இருக்கிறாய் என்ற உண்மையை ஆதாரத்தோடு விளக்கி திராவிடக்கட்சி வைத்திருப்பவர்களின் வெறுப்பை பெற்ற கட்சி இந்த "நாம் தமிழர்".

 

பெரியாரை முழுமையாக ஏற்ற ஒருவன் எப்படியிருக்க வேண்டுமென்ற முன்னுதாரனத்தோடு நின்ற கட்சி... பெரியாரை தமிழ்நாட்டிலையே விமர்சனத்திற்குட்படுத்திய கட்சி... பெரியாரின் எல்லா கொள்கைகளையும் நாங்கள் ஏற்கிறோம் ஆனால் அவரின் மொழிக்கொள்கையை தவிர என்று துணிந்து சொன்ன ஒரு கட்சி...

 

இலக்கு ஒன்றுதான்! தமிழினத்தின் விடுதலை!

அதற்கு...

வீழ்ந்துவிடாத வீரத்தோடும், மண்டியிடாத மனத்தோடும் நாம் தமிழராய் ஒன்றிணைய அழைத்த கட்சி...

 

நாம் தமிழர்கள் என்று நீங்கள் பிரிவினைவாதம் பேசுகிறீர்கள் என்ற போது., நாங்கள் பேசுவது பிரிவினைவாதமென்றால் தனி தெலுங்கானா கேட்டுப்போராடுபவர்கள் யார்?

அவர்களை ஏன் நீங்கள் இத்தனைகாலம் அனுமதித்தீர்கள் என்று இந்திய வல்லாதிக்கத்திடமே கேள்வியெழுப்பிய ஒரே கட்சி...

 

குறிப்பாக என் சமநிலை தமிழ் சமுதாயத்தை தமிழ் சார்த்தும் அரசியல் சார்ந்தும் சிந்திக்க வைத்த கட்சி...

 

சாதி,மதங்களை சாக்கடைகளாக பார்க்க வைத்த கட்சி...

 

இதுவரை நான் எழுதிய வரிகளில் ஒரு இடத்தில் கூட இதை செய்தது சீமான் என்ற தனிமனிதனே என்று துதி பாட வைக்காத கட்சி...

 

இப்படி பல சான்றுகளை ஒவ்வொரு தருணத்திலும் என்னால் சொல்ல முடியும் இனி காலத்தே அதை உரைப்பேன் அது தமிழனான என் கடமை.

இக்கட்சியின் செயல்பாடுகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்ததில் அண்ணன் சீமானின் பங்கை நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

 

எங்களை வளர்க்கும் எங்களின் எதிரிகளே, விமர்சகர்கள் எங்கள் தேசிய தலைவரின் வரிகள் இதோ...

"விமர்சனங்கள் வெறும் வார்த்தைகளேயன்றி கற்களல்ல. # தேசிய தலைவர் ".

 

ஆகவே நீங்கள் விமர்சியுங்கள் நாங்கள் மக்களிடம் சென்று சேர்வோம்.


 

2016... உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு...

நாம் தமிழர்!

Post New Entry

Posted by g.sivas007 on May 18, 2013 at 1:35 AM Comments comments (0)

மே 18 நாம் வீழ்ந்த நாள் அல்ல, எம்மினம் வீறுகொண்டு எழுந்த நாள்: நாம் தமிழர் கட்சி...


 

உலகில் வாழும் எந்த ஒரு இனத்தையும் போல் தாங்களும் முழுமையான அரசியல் சம உரிமையுள்ள மக்களாய், எம்மினத்தின் பூர்வீக தேசத்தில் இறையாண்மையுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஈழத்து மண்ணில் எம்மினம் அரை நூற்றாண்டுக் காலமாக நடாத்திய வீரமிக்க விடுதலைப் போராட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் மெளனிக்கப்பட்ட நாள் மே 18.

 

உலக வரலாறு கண்ட எத்தனையோ விடுதலைப் போராட்டங்களிலெல்லாம் வெளிப்படாத தீரத்தை எமது மண்ணின் விடுதலைக்காக எமது மாவீரர்கள் வெளிப்படுத்தினார்கள். தம் இனம் வாழ தன் உயிரையே அதற்குரிய விலையாகத் தந்து அவர்கள் நடாத்திய விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, தெற்காசிய வல்லாதிக்கங்களின் ஆதரவோடும், உலக வல்லரசுகளின் ஆயுத மற்றும் இராஜதந்திர உதவியுடனும் தமிழினத்தை அழித்தொழிக்கும் கொடும் போரை முன்னெடுத்தது இலங்கை அரசு. இரண்டரையாண்டுக் காலப் போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்றோழித்தது சிங்கள பெளத்த இனவெறி அரசு. போரின் இறுதிக்கட்டத்தில், போர்க் களத்தில் தங்களோடு தஞ்சடைந்திருந்த மக்களை காப்பாற்ற, தம் இன்னுயிரை சிங்கள பெளத்த இனவெறி இராணுவத்திற்குக்கு கேடயாக்கியதோடு, விடுதலைக்காக ஏந்திய தம் துப்பாக்கிகளை மெளனிப்பதாக அந்த மாவீரர்கள் அறிவித்தனர்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, போர்க்களத்தில் அங்கங்களை இழந்து அசையக் கூட முடியாமல் கிடந்த பல்லாயிரக்கணக்கான மக்களை அந்த இடத்திலேயே கொன்று புதைத்த சிங்கள இனவெறி இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் அறிவித்தது. அத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்றும் உலக நாடுகளையும் நம்பவைத்தது. எந்த நாளில் எல்லாம் முடிந்துவிட்டது என்று எம் இன எதிரிகள் அறிவித்தார்களோ, அதே நாளில்தான் எமது இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கான களம் மாறியது. ஈழத் தமிழ் மண்ணில் நடந்த எமது நியாயம் மிக்க விடுதலைப் போராட்டம், உலகப்பந்தில் தமிழர் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் பரவியது.

 

எம்மினத்திற்கு சிங்கள பெளத்த இனவெறி அரசு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழித்தலை போர்க்குற்றம் என்று மட்டும் கூறி, எமது விடுதலைப் போராட்டத்தின் மூச்சை முடித்துவிட சர்வதேசம் முயன்றது. அந்த இராஜதந்திர சித்து விளையாட்டில் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, நேரிடையாகவும் மறைமுகமாகவும் முன்னின்று செயலாற்றியது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கடந்த ஆண்டு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது போல் நின்று, அந்த தீர்மானத்தையே நீர்த்துப்போகச் செய்து வெற்றி பெற வைத்தது. இந்த ஆண்டு அமெரிக்கா மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்தையே பலவீனமாக்கி வெற்றி பெற வைத்து, பன்னாட்டு விசாரணை என்கிற வழியை அடைத்து இனப் படுகொலை இலங்கை அரசைக் காப்பாற்றியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்கங்கள் அங்கு நடந்தது ஒரு திட்டமிட்ட இன அழித்தல் என்பதை இன்றளவும் ஏற்க மறுக்கின்றன. ஏனெனில் தமிழின அழிப்புப் போரில் ஏதோ ஒரு வகையில் அவர்களும் பங்கு செலுத்தியிருக்கிறார்கள்.

 

ஒன்றே முக்கால் இலட்சம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டது இன அழித்தல் என்பதன்றி வெறென்ன? என்று தமிழினம் சர்வதேசத்திற்கு கேள்வி எழுப்பியது. எம்மினம் விடுதலைக்காக போராடியது, அதன் காரணமாகவே அது இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டது என்பதை உரக்க கூறி வருகிறோம். தமிழினத்தின் அந்தக் குரல் இன்று உலக மன்சாட்சியை உலுக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு மேல் ஈழப் பிரச்சனை என்பது தமிழ்நாட்டில் எடுபடாது என்று கூறினார்கள். அப்படி கூறியவர்களே இன்று ஈழப் பிரச்சனை விட்டால் தங்களுக்கு தமிழ்நாட்டு அரசியலில் இடமில்லாமல் போய்விடும் என்று உணர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தி திணிப்பிற்கு எதிராக நடந்த மொழிப்போரில் வீறுகொண்டு போராடியது போல் இப்போது தமிழீழ விடுதலைக்காக எமது மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். எந்த நாளில் இந்த இனம் ஈழத்து மண்ணில் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த நாள் இன்று தமிழினத்தின் எழுச்சி நாளாகியுள்ளது.

 

நாம் வீழ்ந்தோம் என்று நினைத்த உலகு, இன்று அவர்கள் வீறுகொண்டு எழுந்துள்ளார்கள் என்று கூறுகிறது. கனடா தலைநகர் டொரண்டோவில் இருந்து தமிழ்நாட்டின் கடலூர் வரை இன்று தமிழினம் தனது விடுதலைக்கான எழுச்சி நாளாக மே 18ஐ கடைபிடிக்கிறது. இந்த நாள், ஓர் இடத்தில் தமிழரெல்லாம் கூடி, துயரத்தை பகிர்ந்துகொண்டு கலைந்து செல்லும் நாளல்ல. மாறாக, எந்த இலக்கை எட்டுவதற்கு நாம் இத்தனை இலட்சம் சொந்தங்களை பலிகொடுத்தோமோ அந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து போராட உறுதியேற்கும் நாள்.

 

ஈழத் தமிழ் மண்ணில் எம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்காமல் நாங்கள் ஓயப்போவதில்லை என்பதை உலகிற்கு பறைசாற்ற கடலென கூடுவோம் கடலூரில். பகை மிரள திரளுவோம் பைந்தமிழ் இனத்தீரே. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று முழங்கிடுவோம் வாரீர். கடலூர் மஞ்சக் குப்பம் திடலில் கடலென திரள்வோம், வாரீர், வாரீர். துளித் துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு.

 

நாம் தமிழர் கட்சிக்காக,

 

செந்தமிழன் சீமான்...

தலைமை ஒருங்கிணைப்பாளர்.


View Older Entries»

Rss_feed

Categories

  • Tamilan History (4)
Create your own free website today
Webs
Better Websites Made Simple